search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரகல பிரபாகர்"

    ஆந்திர மாநில அரசின் தகவல் தொடர்பு ஆலோசகர் பதவியில் இருந்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கணவர் பரகல பிரபாகர் இன்று ராஜினாமா செய்தார். #APgovermentadviser #resigns
    ஐதராபாத்:

    ஆந்திர மாநில அரசின் தகவல் தொடர்பு ஆலோசகராக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனின் கணவர் பரகல பிரபாகர் கடந்த 2014-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2 ஆண்டு ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்ட இவரது பதவி மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.

    இதையடுத்து, பாஜகவுடன் கூட்டணியில் இருந்த ஆந்திர மாநில அரசு ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி வந்தார். இதையடுத்து சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை என்பதால் சமீபத்தில் பாஜகவுடனான கூட்டணியை தெலுங்கு தேசம் கட்சி முறித்துக்கொண்டது.

    இதைத்தொடர்ந்து, அம்மாநில முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு, பாஜகவை முழு மூச்சாக எதிர்த்து வந்தார். இந்நிலையில், ஆந்திர அரசின் தகவல் தொடர்பு அதிகாரியாக இருந்த பரகல பிரபாகரன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ சிறப்பு அந்தஸ்து கோரி வரும் மாநில அரசின் போராட்டத்துக்கு தாம் தடையாக இருக்க விரும்பவில்லை. எதிர்க்கட்சி தலைவர்கள் எழுப்பும் கேள்விகள் வேதனை அளிக்கின்றன. உங்களின் விருப்பத்துக்கு மாறாக நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    4 ஆண்டுகள் பதவி வகித்த பரகல பிரபாகரின் பதவிக்காலம் ஜூலை 4-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தற்போது அவர் ராஜினாமா செய்திருப்பதும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. #APgovermentadviser #resignsa
    ×